×

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் பிரச்னை தீர்க்கப்படும் சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா பேச்சு

சங்கரன்கோவில், மார்ச் 22:  சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர்,  இலந்தைகுளம்,  கருதானூர்,  திருமலாபுரம்,  பனவடலிசத்திரம்,  சொக்கலிங்கபுரம்,  வடக்கு, தெற்கு பனவடலி,  வன்னிக்கோனேந்தல்,  தேவர்குளம்,  மேல இலந்தைகுளம், சொக்கநாச்சியார்புரம்,  சாலைப்புதூர், பன்னீரூத்து, மூவிருந்தாளி,  தெற்கு, வடக்கு அச்சம்பட்டி, வடக்கு, தெற்கு பூலாங்குளம் உள்ளிட்ட  கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது,

சங்கரன்கோவில் தொகுதியில்  தொழிற்பேட்டை அமையவும், கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினமும் தண்ணீர் வழங்க முயற்சி எடுப்பேன். சங்கரன்கோவிலில் மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பிரசாரத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன்,  மதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றி விஜயன்,  மானூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் வேலுசாமி, மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் சண்முகபாண்டியன், செந்தூர்பாண்டியன், காங்கிரஸ் வட்டார இளைஞரணி நிர்வாகி கணேஷ், மேலநீலிதநல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி நிர்வாகி பெரியதுரை,  பூலித்தேவன் மக்கள் கழக நிறுவனர் பெருமாள்சாமி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார்,  சுற்றுச்சூழல் அணி அழகுதுரை,  மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் நிதிஷ்,  இளைஞரணி ஜெயக்குமார், செல்லபாண்டியன்,  கார்த்திக்,  குட்டிராஜ்,  ஆறுமுகபாண்டியன், தொண்டரணி துணை அமைப்பாளர் செல்வம்,  சொக்கலிங்கபுரம் கிளை  செயலாளர் பரமையா, வடக்கு பனவடலி செயலாளர் நவமணி, கிளை செயலாளர்கள் வன்னிக்கோனேந்தல்  வெளியப்பபாண்டியன்,  வடக்கு புளியம்பட்டி குழந்தைபாண்டியன், வக்கீல் பெரியதுரை, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : DMK ,Raja ,Sankarankoil ,
× RELATED மோ(ச)டி வித்தை தமிழ்நாட்டில் எடுபடாது: வைகோ பேச்சு