×

பாலக்கோடு அருகே ராணுவ வீரர் மீது இளம் பெண் புகார்

தர்மபுரி, மார்ச் 22: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் திவ்யா (23). இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த உறவினர் வைத்தீஸ்வரன் மகன் விக்னேஷ் (26). என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். விக்னேஷ் ஸ்ரீநகர் பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் கடந்த மாதம் விடுமுறையின் காரணமாக, சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், திவ்யா தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி விக்னேஷ்யிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த விக்னேஷ், தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் திவ்யாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திவ்யா இது குறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்தில், விக்னேஷ் மீதும் மற்றும் அவரது நண்பர் எல்லை பாதுகாப்பு படை வீரரான சின்னத்தம்பி (36). என்பவர் மீதும் புகார் அளித்தார். புகாரின்பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Balakot ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...