×

ராஜபாளையம் நகருக்கு முத்தான மூன்று திட்டங்கள் கொண்டு வந்த பெருமை திமுகவையே சேரும் வேட்பாளர் தங்கப்பாண்டியன் பேச்சு

ராஜபாளையம், மார்ச் 22: ராஜபாளையம் நகருக்கு மூன்று முத்தான  திட்டமான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத்திட்டம்,  ரயில்வே மேம்பாலத்திட்டம் கொண்டுவந்த பெருமை திமுகவை சாரும் என, திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் ெதரிவித்தார். ராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் எம்எல்ஏ, ராஜபாளையம் நகர் வார்டு-12 ஆண்டாள்புரம், ஆர்.ஆர்.நகர், பொன்னகரம், பாரதி நகர் உள்ளிட்ட பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் பேசிய தங்கப்பாண்டியன், ‘‘பொதுமக்களின் இடர்பாடுகளை போக்க ஓடோடி பணியாற்றிய உங்கள் வீட்டுப் பிள்ளை இம்மண்ணின் மைந்தன் உங்களில் ஒருவனான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். ராஜபாளையம் நகருக்கு மூன்று முத்தான திட்டமான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத்திட்டம், ரயில்வே மேம்பாலத்திட்டம் கொண்டுவந்த பெருமை திமுகவை சாரும். இத்திட்டங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகளும் தெருக்களும் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சி அமைந்தவுடன் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து தெரு மற்றும் சாலைகளும் சீரமைக்கப்படும். அடுத்ததாக ராஜபாளையம் நகருக்கு மின் மயானம் கொண்டுவரப்படும்’’ என்றார். இதில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், திமுக மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி  மணிகண்டராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Thangapandian ,DMK ,Rajapalayam ,
× RELATED 100க்கான வாகனங்களில் சென்று தி. நகரில்...