×

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் கயல்விழி கிராம பகுதிகளில் வாக்கு சேகரிப்பு

தாராபுரம், மார்ச் 22: தாராபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கயல்விழிக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். தாராபுரம் (தனி) தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கயல்விழி போட்டியிடுகிறார். இவர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மூன்றாவது நாள் வாக்கு சேகரிக்கும்  நிகழ்ச்சியாக குளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட கரையூர் மருதக்  கவுண்டன் வலசு காளியம்மன் புதூர் கவுண்டன் வலசு உள்ளிட்ட பகுதிகளில் கிராம  மக்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி  வேண்டினார்.

செல்லும் கிராமங்களில் எல்லாம் தி.மு.க. வேட்பாளர் கயல்விழிக்கு கிராமமக்கள் ஆரத்தி எடுத்தும் அன்புடன் வரவேற்றும் உற்சாக வரவேற்பு  அளித்தனர். அப்போது பொதுமக்கள், மு.க. ஸ்டாலின் அறிவித்த பெண்களுக்கு இலவச பஸ் பயணம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம், மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து , கூட்டுறவு விவசாய கடன்கள் ரத்து என்ற தகவல்கள் எங்களை மகிழ்ச்சியில்  ஆழ்த்தியதாகவும் எனவே எங்கள் வாக்குகளை உறுதியாக  உதயசூரியன் சின்னத்திற்கு அளிப்போம், என வேட்பாளர்  கயல்விழியிடம் உறுதியளித்தனர்.

கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியின்போது தாராபுரம்  ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், பேரூர் கழக செயலாளர்  துரைசாமி, பேரூராட்சி முன்னாள் தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர்  செல்வகுமார், கிளை கழக நிர்வாகி மணிவாசகம், தகவல் தொழில்நுட்பப் பிரிவு  அலங்கியம் அமுதா உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags : Tarapuram ,DMK ,Kayalvizhi ,
× RELATED காங்கயத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் மலர் தூவி மரியாதை