×

துடியலூரில் தேர்தல் அலுவலகத்தை பையா ஆர்.கிருஷ்ணன் திறந்து வைத்தார்

கோவை, மார்ச் 22: தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை மாநகர் மேற்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக பையா (எ) ஆர்.கிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர்  சர்கார் சாமக்குளம் ஒன்றியம் முழுவதும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள் திரளாக வந்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தலைமை தேர்தல் அலுவலகம் கோவை - துடியலூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.   இந்த அலுவலகத்தை பையா (எ) ஆர்.கிருஷ்ணன் திறந்து வைத்தார்.         

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மற்றும் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வெ.நா.பழனியப்பன், மணி (எ) விஜயகுமார், ஜோதிபாசு, சுப்பையன், சரவணன் மற்றும் ம.தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் சி.வி.தங்கவேலு மற்றும் தி.மு.க பகுதி கழக பொறுப்பாளர் அருள்குமார், ஒன்றிய கழக செயலாளர் எஸ்.பி.சுரேஷ்குமார், பேரூர் கழக செயலாளர் சுரேந்திரன் மற்றும் அரசூர் பூபதி, சிங்கை ரவிச்சந்திரன், ஆர்.என் லோகநாதன் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சுரேந்திரபாபு, மோகன்ராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., செந்தில்குமார், விஜயா மற்றும் கொ.ம.தே.க. கனகரத்தினம், பரமேஷ், வித்யாராணி, ம.தி.மு.க விஷ்வராஜ், சம்பத் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வினோத், கண்ணய்யன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Piya R. Krishnan ,Tudiyalur ,
× RELATED தோப்பில் 800 கிலோ பாக்கு திருடிய 2 பேர் கைது