முசிறி, மார்ச் 21: முசிறியில் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் முசிறியில் அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்தார்.முசிறி, தொட்டியம் தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முசிறி தொகுதி திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் திமுக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், சாலையோர கடை வியாபாரிகள், ஆகியோரிடம் வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், முசிறியில் அரசு தொழில்நுட்ப கல்லூரி அமைத்திடவும், முசிறி நகர மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தினசரி வழங்கிடவும், பாசன வாய்க்கால்களை தூர் வாரி கரைகளை உயர்த்தி பலப்படுத்தவும், விவசாயம் செழித்திடவும்.முசிறி சிறப்பு நிலை பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், கேகேஆர் சேகரன், திமுக செயற்குழு உறுப்பினர் கோட்டூர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், நகர செயலாளர்கள் சிவகுமார், சவுந்தரராஜன், தக்காளி தங்கராசு, நிர்மலா சந்திரசேகரன், நிர்வாகிகள் சப்தரிஷி, தினேஷ், செல்வராஜ், ராஜசேகர், துரை, முருகன், புதுபட்டி சரவணன், ரமேஷ், ராஜேஷ்,உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.