×

அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் உறுதி தேர்தல் பணியாற்ற மாஜி ராணுவ வீரர்களுக்கு அழைப்பு

திருச்சி, மார்ச் 21: திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வரும் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாநகர போலீசாருடன் இணைந்து பணியாற்றுவதற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் முன்வர வேண்டும். இதுவரை தமிழகத்தில் நடந்த தேர்தல்கள் அனைத்திலும் தங்களது பங்களிப்பால் சிறப்பாகவும், அமைதியான முறையிலும் நடைபெற்றன. அதேபோல் தற்போது 2021ல் நடக்கும் சட்டமன்ற தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடப்பதற்காக தங்களுடைய பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தேர்தல் பணி செய்பவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படுவதுடன், தேர்தலில் தபால் வாக்குபதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும். எனவே விருப்பமுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, அலுவலக எண் 0431 2333577, வாட்ஸ்அப் எண் 9626273399 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : AIADMK ,KP Krishnan ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...