×

8 சட்டமன்ற தொகுதியில் 97 வேட்பு மனுக்கள் ஏற்பு கும்பகோணம் வணிக நிறுவனங்களில் கொரோனா தடுப்புமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தல்

கும்பகோணம். மார்ச் 21: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவலை முன்னிட்டு நோய் தொற்றைகட்டுப்படுத்தும் வகையில் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நிறுவனங்களும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கள ஆய்வு செய்ய கண்காணிப்பு சுற்றாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகையால் நாளை முதல் அனைத்து வணிக நிறுவனங்களிலும் முக கவசம் அணிவது, கிருமி நாசினி சாதனங்கள் வைத்திருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது என அனைத்து விதிமுறைகளும் கட்டாயமாகிறது. எனவே விழிப்புடன் செயல்பட்டு கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Tags : Kumbakonam ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...