×

சேந்தமங்கலம் ஊராட்சியில் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ வாக்கு சேகரிப்பு

அரவக்குறிச்சி, மார்ச் 21: அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ அரவக்குறிச்சி ஒன்றியத்தில் சேந்தமங்கலம், லிங்கமநாயக்கன் பட்டி மற்றும் தெத்துப்பட்டி ஊராட்சிகளில் பல்வேறு இடங்களில் தீவிரமாக வாக்குச் சேகரித்தார். பெண்கள் ஆர்வமுடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அரவக்குறிச்சி ஒன்றியத்தில் சேந்தமங்கலம் ஊராட்சியில்சீர்தப்பட்டி, காலனி, செல்லிவலசு, கடாரம்புதூர், குறிக்காரன்வலசு, ஊத்துப்பாளயம், புதுப்பட்டி, மலைப்பட்டி, ஆண்டிபட்டி, சொக்லாபுரம்,எரவநாயக்கன்பட்டிதெத்துப்பட்டி ஊராட்சி ஊத்துப் பட்டி. பெரிய தெப்பாரபட்டி, இந்திரா நகர், வேலன் செட்டியூர், பங்கார்பாடிஉள்ளிட்ட ஊராட்சி பகுதியில் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோதீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள் ஆர்வமுடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ பேசுகையில்,இப்பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரப்படும், பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம், பெண்களுக்கு மாதம்ரூ 1000 வழங்கப்படும், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு பெண்கள் உள்ளிட்ட 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பெண்களுக்கு என்று பல்வேறு சலுகைகளை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆகையால் வரும் 6ம் தேதி நடக்கவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் ஸ்டாலின் கரத்தை வலுபடுத்தி, அவரை முதல்வராக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன் என்றார். இந்த தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் மணியன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் மணி, வாங்களியப்பன் உள்ளிட்ட திமுகவினர் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்

Tags : DMK ,Monjanur Ilango ,Aravakurichi constituency ,Sainthamangalam panchayat ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி