×

கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர் வருகை

கரூர், மார்ச் 21: கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொதுப் பார்வையாளராக நாராயண் சந்திர சர்க்கார் கரூர் மாவட்டத்திற்கு வந்துள்ளார்.சட்டமன்ற தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க விரும்பினால் அவரின் தொலைபேசி எண்ணில் (9498747708) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் பார்வையாளர் தங்கியுள்ள டிஎன்பிஎல் விருந்தினர் மாளகை பிளாக் எண் 2ல், அறை எண் 7ல் தினமும் காலை 9மணி முதல் 10மணி வரை நேரில் சந்தித்தும் புகார்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Krishnarayapuram ,Kulithalai ,
× RELATED போக்குவரத்திற்கு இடையூறாக கொடி கம்பம் நட்ட நாதக மீது வழக்கு பதிவு