×

திருச்செந்தூர் அமமுக வேட்பாளர் வடமலைபாண்டியன் பங்குதந்தையிடம் ஆசி

திருச்செந்தூர், மார்ச் 21: திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் வடமலைபாண்டியன் தொகுதி முழுவதும் உள்ள பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார். திருச்செந்தூரில் உள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை சந்தித்து தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு திரட்டினார். இதனையடுத்து அமலிநகர் பங்கு தந்தை ரவீந்திரனிடம் ஆசி பெற்றார். பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று குக்கர் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுமாறு தீவிர வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளருக்கு அப்பகுதி பொதுமக்களும், கட்சியினரும் சிறப்பான வரவேற்பளித்தனர். திருச்செந்தூர் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆவுடையார்குளம் மறுகால் ஓடையினை தூர்வாரி கரையோரத்தில் காங்கிரீட் சுவரினால் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் இவ்வோடையின் கரையில் நடைபாதை மற்றும் பூங்கா அமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி எடுக்க நடவடிக்கை எடுப்பேன். தொகுதியில் பல ஆண்டுகள் தனக்கு அறிமுகம் உள்ளதால் தனது வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது என்றார்.

 உடன் அமமுக மாவட்ட செயலாளர் மனோகரன், மாவட்ட ஜெ, பேரவை இணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் இல்லங்குடி, ஒன்றிய மீனவரனி செயலாளர் அமலி ஜெஸ்லர், நகர செயலாளர் முருகேசன், தேமுதிக தொகுதி பொறுப்பாளர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி பேராட்சிசெல்வன், ஹரிகிருஷ்ணன் வடமலைபாண்டியன் மற்றும் அமமுக, தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags : Thirichentur Amanda ,Candidate ,North Malleypandian ,
× RELATED வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த...