×

வைகுண்டத்தில் அதிமுக கூட்டணி ஆலோசனை கூட்டம்

வைகுண்டம், மார்ச் 21: வைகுண்டம் புதுக்குடியில் அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அதிமுக வேட்பாளர் எஸ்.பி சண்முகநாதன் தலைமை வகித்து பேசினார். அவர் பேசுகையில், ‘அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த திட்டங்கள் குறித்தும், அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்து கூறி பொதுமக்களிடம் வாக்குசேகரிக்க வேண்டும். அதிமுக தேர்தல் அறிக்கையை வீடு, வீடாக விநியோகித்து தீவிர களப்பணியாற்ற வேண்டும்’ என்றார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், அழகேசன், விஜயகுமார், தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினரும் ஆழ்வார்கற்குளம் கூட்டுறவு வங்கி தலைவருமான அய்யாத்துரைபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், கொங்கராயகுறிச்சி கிளைச்செயலாளர் வெங்கடாசலம், கொங்கராயகுறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜாகீர்உசேன், வைகுண்டம் நகர செயலாளர் காசிராஜன், பாரதிய ஜனதா கட்சியின் துத்துக்குடி மாவட்ட தலைவர் பால்ராஜ், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துராமலிங்கம், பாஜக மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், கோட்ட பொருளாளர் ராதா, ஒன்றிய தலைவர் சாமிநாதன், அமைப்பு சாரா பிரிவு மாவட்ட தலைவர் சித்திரை, விவசாய அணி மாவட்ட செயலாளர் மருது, செயற்குழு உறுப்பினர் வெள்ளப்பாண்டி, வைகுண்டம் விவசாய ஒன்றிய தலைவர் சண்முகம், மாவட்ட பிரசார பிரிவு தலைவர் மகேஷ்வரன், ஒன்றிய தலைவர்கள் செந்தில், கேசவன், அர்ஜுன் பாலாஜி உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக வைகுண்டம் பெருமாள் கோயில் தெருவில் அதிமுக தேர்தல் பணி அலுவலகம் திறப்பு விழாவில் வேட்பாளர் சண்முகநாதன் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து வைகுண்டம் பகுதியில் வாக்குசேகரித்தார்.

Tags : AIADMK ,Auwaikundam ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...