×

பாளை தொகுதியில் தீவிர பிரசாரம் மேலப்பாளையத்தில் அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரி எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் உறுதி

நெல்லை, மார்ச் 21:  மேலப்பாளையத்தில் அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரி அமைத்துத்தருவேன் என பாளை தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் நெல்லை முகமது முபாரக்  உறுதியளித்தார்.  அமமுக கூட்டணியில் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில்  எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முகமது முபாரக் தொகுதி முழுவதும்  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அதிகாலை முதலே பிரசாரத்தை துவங்கிய அவர் மேலப்பாளையத்தில் 35, 36, 37 ஆகிய வார்டுகளில்  வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

 மேலப்பாளையத்தில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை பிரசாரத்தில் எடுத்துரைத்த அவர், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதில் கல்வி நிறுவனங்கள் அமைக்கத் தவறிய முந்தைய அதிமுக அரசை சாடினார். மேலும் இத்தேர்தலில் தன்னை எம்எல்ஏவாக தேர்தெடுந்தால், மேலப்பாளையம் பகுதி மாணவ,  மாணவிகள் பயன் பெறும் வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ. துவங்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்தார். செல்லும் இடமெல்லாம் அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

 இதில் நெல்லை மாவட்ட  துணைத்தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி,  மாவட்ட பொதுச்செயலாளர் ஹயாத் முஹம்மது, புறநகர் மாவட்டத் தலைவர் கோட்டூர் பீர்மஸ்தான்,  மாவட்டச் செயலாளர்கள், பேட்டை முஸ்தபா புஹாரி சேட், தொழிற்சங்க மாவட்டத் தலைவர் சலீம்தீன், துணைத்தலைவர் கல்வத், மருத்துவ சேவை அணி மாவட்டத் தலைவர் ஜெய்லானி,  செயலாளர் பர்கிட் சேக், 37வது தலைவர் அஹ்மது உள்ளிட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : ITI ,Polytechnic College STPI ,Nellai Mubarak ,Palai constituency ,
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...