×

காரியாபட்டி மல்லாங்கிணற்றில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

காரியாபட்டி, மார்ச் 21: காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் அதிமுகவை சேர்ந்த நரிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாரி, விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தார். முன்னதாக நரிக்குடி அதிமுக மாஜி யூனியன் தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான ஜெயராஜா, அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து, மல்லாங்கிணற்றில் தங்கம் தென்னரசு எம்எல்ஏவை சந்தித்து சால்வை அணிவித்தார். பின்பு மதுரை பிரசாரத்திற்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். உடன் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ இருந்தார்.

இதேபோல, திமுக ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் ஏற்பாட்டில், இசலி கிராமத்தை சேர்ந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். அப்போது பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட பிரதிநிதி ஆதிமூலம், மனோகரன், செல்லப்பா, பாலமுருகன், நரிக்குடி கோபால், கிளை  செயலாளர் சித்திரைச்செல்வன், சேதுபதி, மருது, செல்வம், வேலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags : AIADMK ,DMK ,Kariyapatti Mallankinar ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...