×

கிராமங்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படும்: காங்கிரஸ் வேட்பாளர் ஜி.அசோகன் உறுதி


சிவகாசி, மார்ச் 21: கிராம ஊராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜி.அசோகன் தெரிவித்தார். சிவகாசி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜி.அசோகன் போட்டியிடுகிறார். இவர், சிவகாசி ஊராட்சி ஒன்றியம் துரைச்சாமிபுரம், காக்கிவாடன்பட்டி, கான்சாபுரம், மணியம்பட்டி, ஊராம்பட்டி கிராமங்களில் நேற்று முன்தினம் வாக்கு  சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘அதிமுக ஆட்சியில் கடந்த  10 ஆண்டுகளாக எந்த வித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. கிராம ஊராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.

சுகாதார வாளகங்கள் முறையாக செயல்படவில்லை. நான் வெற்றி பெற்றால் கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி சாலை, குடிநீர், சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தருவேன். திமுக தேர்தலில் வெற்றி பெற்றால், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கிராம பகுதி மக்களுக்கு 150 நாட்கள் வேலை வழங்கப்படும். பட்டாசு தொழிலுக்கு நிரந்தர  தீர்வு காணப்பட்டு  தொழிலாளர்களின்  வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். இதே போன்று தீப்பெட்டி, அச்சு தொழிலை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க படும் என்றார். திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags : Congress ,G. Asokan ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...