×

அக்ரஹாரம் தெருவில் அச்சுறுத்தும் குரங்குகள்

சிவகாசி, மார்ச் 21: சிவகாசி அருகே திருத்தங்கல்லில் பெருமாள் கோயில், கருநெல்லிநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில்களில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் வசிக்கின்றன. இவைகள் கோயில் பகுதியிலுள்ள அக்ரஹாரம் குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வருகின்றன. பொதுமக்கள் கொண்டு செல்லும் பொருட்களை பறித்து விடுகின்றது. மேலும், குழந்தைகளை அச்சுறுத்துவதுடன்,  வீட்டில் உள்ள பொருட்களையும் தூக்கி சென்று விடுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குளை உடனே பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Agraharam Street ,
× RELATED தங்கும் விடுதியில் கல்லூரி மாணவன் தற்கொலை