×

மேலூரில் ஊழியர் கூட்டம்

மேலூர், மார்ச் 21: மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மதுரை எம்பி வெங்கடேசன் பேசியதாவது:  பாரம்பரியமிக்க மதுரையின் 10 தொகுதிகளிலும் அடிமையின் ஆட்சியை முறியடித்து, திமுக தலைமையிலான நல்லாட்சி அமைய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நாம் சந்தித்த இன்னல்கள், அவலங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. அதிமுகவினர் பிரதமர் மோடியின் படத்தை போட்டு வாக்கு சேகரிக்க முடியாத நிலை உள்ளது. அதிமுக தமது சாதனையை சொல்லி ஓட்டு கேட்கும் நிலையில் இல்லை. மக்கள் இந்த அரசை தவிர்க்க தயாராக உள்ளார்கள் என பேசினார்.

Tags : Melur ,
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!