×

மேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

மேலூர், மார்ச் 21: மேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த நகை, பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றனர். மதுரை மாவட்டம்,  மேலூர் அருகே மலம்பட்டியில் சிவகங்கை சாலையை சேர்ந்தவர் செல்வமோகன். இவர் தனது மனைவி சரஸ்வதி மற்றும் குழந்தைகளுடன் அருப்புகோட்டை அருகில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டார். நேற்று வீடு திரும்பிய ேபாது, வீட்டின் பூட்டை உடைந்து கிடந்தது. வீட்டு பீரோவில் இருந்த 4 பவுன் தங்க செயின், மோதிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம், டிவி உட்பட சில பொருட்களையும் திருடி சென்றிருந்தனர். தகவல் அறிந்த மேலூர் டிஎஸ்பி ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags : Melur ,
× RELATED மாநில செஸ் போட்டியில் அரசுப்பள்ளி மாணவிகள் அசத்தல்