×

காங்கயத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

காங்கயம், மார்ச் 21: காங்கயம் பழையகோட்டை சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. காங்கயம் நகரில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீருக்காக போடப்பட்ட குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இந்த நிலையில் காங்கயம்-பழையகோட்டை சாலையில் மூர்த்திரெட்டிபாளையம் பிரிவு அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் ஓடியது. இந்த குழாயின் வழியே வெளியேறும் தண்ணீர் அப்பகுதியில் குளம் போல் தேங்கிநின்று, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உடைந்த குழாயை சரி செய்து, குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Congress ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...