×

மீனவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்: மயிலை த.வேலு பிரசாரம்

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை.த.வேலு கடந்த 14ம் தேதி முதல் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று 125 ‘அ’ வட்டத்தில் உள்ள டும்மி குப்பம், குயில் தோட்டம், ஜோசப்  காலனி,  மல்லிமா நகர், அப்பு தெரு, முத்து கிருஷ்ணன் தெரு, பஜார் தெரு, பரிபூரண விநாயகர் கோயில் தெரு, அருண்டேல் தெரு, காவலர் குடியிருப்பு தபால் ஊழியர் குடியிருப்பு, மத்தள நாராயணன் தெரு, மாங்கொல்லை, நடுத்தெரு, சாலை  தெரு  ஆகிய பகுதிகளில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது மகளிருக்கு மாதம் ரூ.1000, கொரோனா பாதிப்பு காரணமாக ரேஷன் கார்டுக்கு ரூ.4000, சிலிண்டருக்கு ரூ.100 மாணியம், மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள், மீனவர் சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும், சொந்தமாக  ஆட்டோ  வாங்க ரூ.10 ஆயிரம் அரசு மானியம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள், நீங்கள் தொகுதியின் ெசாந்தக்காரர், எங்கள் வாக்கு உங்களுக்கே, திமுக  வெற்றி  பெறுவது நிச்சயம் என்று பொதுமக்கள் மலர்தூவி, ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். அதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மீனவ மக்கள் மற்றும் அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை  கேட்டறிந்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்து  நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

Tags : Mayilai T.Velu ,
× RELATED மீனவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்: மயிலை த.வேலு பிரசாரம்