×

பேய்க்குளம் பகுதியில் ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் வாக்குசேகரிப்பு

சாத்தான்குளம், மார்ச் 20:ஸ்ரீவைகுண்டம்  தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் எம்எல்ஏ  நேற்று பேய்க்குளம் பகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். வைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகநாதன்  எம்எல்ஏ நேற்று மாலை சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதிக்கு நேற்று வருகை தந்தார். முன்னதாக அவர் கட்டாரிமங்கலம் ஊராட்சித் தலைவர் கீதாகணேசன், ஆழ்வார்திருநகரி யூனியன் கவுன்சிலர் காந்திமதி ஆகியோர் சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். பின்னர் மீரான்குளம் ஊராட்சித் தலைவர் சிவபெருமாள், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவர் பெரியசாமி ஸ்ரீதர்,யூனியன் கவுன்சிலர் காந்திமதி , தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி தெற்கு மாவட்டத் தலைவர் முருகேசன்  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

இங்குள்ள மக்களிடம் தற்போது நடந்து வரும் நல்லாட்சி தொடர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து தன்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் பேய்க்குளம் பஜாரில் டீக்கடைக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்நாராயணன், ஒன்றிய அவைத் தலைவர் முத்தையா, ஆழ்வார்திருநகரி ஜெ.பேரவை செயலாளர் ரவிந்திரபாபு, தமாக ஆழ்வார்திருநகரி வட்டாரத் தலைவர் இளையராஜ், மாவட்ட பாஜக பிரசார பிரிவு செயலாளர் மதியழகன், சீனிவாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 

Tags : AIADMK ,Shanmuganathan ,Srivaikuntam ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...