×

தேர்தல் பிரசாரத்திற்கு நெல்லை வரும் தினகரனுக்கு உற்சாக வரவேற்பு செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

கேடிசி நகர், மார்ச் 20: தேர்தல் பிரசாரத்திற்கு நெல்லை வரும் டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பளிப்பது என நெல்லையில் நடந்த அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெல்லை சட்டமன்ற தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டம், உடையார்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தாழை மீரான் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் முகமது காசிம், நெல்லை தொகுதி செயலாளர் ஜெய்லானி, தேமுதிக மாவட்ட செயலாளர் மீனாட்சிசுந்தரம், அவைத்தலைவர் மாடசாமி, பொருளாளர் சண்முகவேல், தமிழ்நாடு முஸ்லீம் லீக் நெல்லை தொகுதி செயலாளர் யாசின் அரபாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நெல்லை சட்டமன்ற தொகுதியை அமமுகவுக்கு ஒதுக்கி பால்கண்ணனை வேட்பாளராக நிறுத்திய கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவிக்கப்பட்டது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் அமமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபடுவது, நெல்லை தொகுதிக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தரும் டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பளிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அமமுக தொழிற்சங்க செயலாளர் நெல்லை பரமசிவன், பொதுக்குழு உறுப்பினர் மணிமூர்த்தீஸ்வரம் ஆறுமுகம்,

மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஆவின் அண்ணாசாமி, பகுதி செயலாளர்கள் பேச்சிமுத்துபாண்டியன், மாவட்ட பொருளாளர் நயினார், ஸ்டார் ஐயப்பன், ஒன்றிய செயலாளர்கள் வேல்பாண்டி, சின்னத்தம்பி மற்றும் மணிவண்ணன், மாடசாமி, தேமுதிக அவைத்தலைவர் மாடசாமி, மாவட்ட துணை செயலாளர் சண்முகவேல், சின்னத்துரை, பகுதி செயலாளர் மாயாண்டி, தமிழ்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Dinakaran ,Nellai ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!