×

பாளையங்கோட்டை தொகுதியில் அதிமுக பேச்சாளர் சுயேட்சையாக மனு தாக்கல்

நெல்லை, மார்ச் 20: பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட அதிமுக பேச்சாளர் சடகோபன் நேற்று மனு தாக்கல் செய்தார். பாளையங்கோட்டை சட்டசபை தொகுதிக்கு திமுக சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், அதிமுக சார்பில் ஜெரால்ட், எஸ்டிபிஐ சார்பில் மாநில தலைவர் முகம்மது முபாரக் உள்பட 31 பேர் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதில் பாளை. வண்ணார்பேட்டை பரணி நகரை சேர்ந்த அதிமுக பேச்சாளர் சடகோபன், சுயேட்சையாக போட்டியிட பாளை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறுகையில், அதிமுகவில் வேட்பாளர் தேர்வு முறையாக நடத்தப்படவில்லை. நானும் சீட் கேட்டு மனு செய்திருந்தேன். தற்போது சுயேட்சையாக போட்டியிடுகிறேன், என்றார். இதேபோல் கல்லறைகளை சேதப்படுத்திய வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் உடையார் சார்பில் அவரது மகன் நேற்று மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : AIADMK ,Palayankottai ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...