×

தண்டராம்பட்டு அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர் கைது


தண்டராம்பட்டு, மார்ச் 20: தண்டராம்பட்டு அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ரெட்டியார்பாளையம் கிராமத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று அதிகாலை 5 மணியளவில், இந்த ஏடிஎம் மையத்தில் இருந்து ஏதோ உடைக்கும் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஏடிஎம் இயந்திரத்தை எட்டி உதைத்து உடைக்க முயன்றுகொண்டிருந்தார். அவரை திருடன் என நினைத்த அவர்கள் மடக்கி பிடித்து தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் மலமஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன்(31) என்பது தெரிய வந்தது. மேலும், தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்றபோது, அதில் பணம் இல்லாத ஆத்திரத்தில் இயந்திரத்தை எட்டி உதைத்து உடைக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, தானிப்பாடி எஸ்ஐ முத்துக்குமாரசாமி, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்ததாக மணிகண்டன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தார். பின்னர், அவரை தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கம் கிளை சிறையில் அடைத்தார்.

Tags : Thandarambattu ,
× RELATED ஏரியில் மீன் குஞ்சுகளை விட அனுமதிக்க...