×

வீரபாண்டி தொகுதியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து மக்கள் பணியாற்றுவேன் திமுக வேட்பாளர் டாக்டர் தருண் உறுதி

சேலம், மார்ச் 20:சேலம் வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் தருண் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த வகையில் நேற்று ெநய்க்காரப்பட்டியில் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட டாக்டர் தருண் கூறியதாவது:வீரபாண்டி ெதாகுதி க்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கூட, ஆளுங்கட்சியினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சிதிலமடைந்த ரோடுகள், தேங்கிகிடக்கும் குப்ைபகள், விளைநிலங்களில் சாயக்கழிவு நீர், கழிப்பறை, மின்சாரம், குடிநீர் பற்றாக்குறை என்று பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போதைய நோய் பாதிப்புகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், சுகாதாரம் சீர்கெட்டு போனதே முக்கிய காரணம். எனவே நான் வெற்றி ெபற்றவுடன் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, அடிப்படை வசதிகளுக்கு தொகுதியில் முக்கியத்துவம் கொடுப்பேன். அனைத்து அடிப்படை வசதிகளையும் ெசய்து கொடுத்து, சுகாதாரமாக மக்களை வாழ வைப்பதே எனது முதல் பணியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அர்த்தனாரி, பனமரத்துப்பட்டி ஒன்றிய திமுக ெபாறுப்பாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலாசேகர், மாணிக்கம் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

Tags : DMK ,Dr. ,Tarun ,Veerapandi ,
× RELATED திருப்பெரும்புதூர் திமுக வேட்பாளர்...