×

ஏற்காட்டில் கார் மீது முறிந்து விழுந்த மரம் தர்மபுரி தம்பதி தப்பினர்

ஏற்காடு, மார்ச்.20: ஏற்காட்டில், கார் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக தம்பதி உயிர் தப்பினர். தர்மபுரி மாவட்டம், பத்மஸ்ரீநகரை சேர்ந்தவர் சரவணக்குமார்(30). இவரது மனைவி அம்மு(25). இருவருக்கும் ஒரு மாதத்திற்கு முன் திருமணமானது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்தனர். சுற்றுலாவை முடித்து விட்டு நேற்று இரவு, காரில் தர்மபுரிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். நாகலூர் கிராமம் வழியாக புறப்பட்டனர். கரடியூர் கிராமம் அருகே சென்ற போது, சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று திடீரென முறிந்து கார் மீது விழுந்தது. இதில் காரின் முன்பகுதி சேதமானது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து போலீசார் விசாரித்து
வருகின்றனர்.

Tags : Dharmapuri ,Yercaud ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...