×

இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளர் பாஸ்கர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

நாமக்கல், மார்ச் 20: நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் பாஸ்கர் எம்எல்ஏ, தொகுதி முழுவதும் சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று நாமக்கல்- சேந்தமங்கலம் ரோடு பேட்டை பள்ளி வாசலில் தொழுகையை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். கடந்த 10 ஆண்டுகளில் நாமக்கல் பகுதியில் செய்துள்ள சாதனைகளை விளக்கி கூறி ஆதரவு திரட்டினார். அப்போது, அவர் பேசியதாவது: பேட்டை பள்ளிவாசலுக்கு நடைபாதை பேவர் பிளாக், சமையல் கூடம் ஆகியவை ₹10 லட்சத்தில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. பள்ளிவாசல் முன் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ராமாபுரம் புதூர் பகுதியில் உள்ள மூஸ்லிம்களின் கபாஸ்தானுக்கு உயர்மின் கோபுரம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதற்கான நிதியை அதிமுக அரசு உயர்த்தியுள்ளது.

சென்னையில், ஹஜ் இல்லம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், ஒன்றிய செயலாளர் ராஜா, கூட்டுறவு வங்கி தலைவர்கள் கண்ணன், விஜயகுமார், வகுரம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜா ரகுமான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சாதிக்பாட்சா, லியாகத்அலி, அதிமுக நிர்வாகிகள் ரவிக்குமார், குமரன், பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் பாஸ்கர் எம்எல்ஏ கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டார்.

Tags : AIADMK ,Bhaskar MLA ,Islamists ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...