×

தஞ்சை அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பிக்கு ஆதரவாக எம்பி வைத்திலிங்கம் வாக்குசேகரிப்பு

தஞ்சை, மார்ச் 20: தஞ்சை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பிக்கு ஆதரவாக நேற்று தஞ்சையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தஞ்சை சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கரந்தை பகுதி செயலாளர் அறிவுடைநம்பி மாநகரின் பல்வேறு பகுதிகளில்வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை தஞ்சை மாநகரின் முதல் வார்டான பள்ளிஅக்ரகாரத்தில் உள்ள காளியம்மன்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து பிரசாரத்தை தொடங்கினார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் சட்டமன்ற வேட்பாளர் அறிவுடைநம்பிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து திறந்த ஜீப்பில் எம்.பி.வைத்திலிங்கம், வேட்பாளர் அறிவுடைநம்பி ஆகியோர் வீதி வீதியாக வாக்கு சேகரித்தனர்.

பள்ளிஅக்ரகாரம் தெற்குதெரு, வடக்கு தெரு, நடுத்தெரு, கீழத்தெரு, பழைய கும்பகோணம் ரோடு, பெரிய தெரு, கடைத்தெரு, வெண்ணாற்றங்கரை, சோழன்நகர், வேலூர், கரந்தை, வலம்புரி, சருக்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குகள் கேட்டனர். வேட்பாளருடன் வார்டு செயலாளர்கள் மதியழகன், குணசேகரன், சேகர், ராஜேந்திரன், தாஸ், வழக்கறிஞர் முருகேசன், வார்டு பிரதிநிதி விஜயகுமார் ஆகியோர் உடன் சென்றனர். நேற்று 1,2,3,4,5,6 வார்டுகளில் வேட்பாளர் அறிவுடைநம்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பல பகுதிகளில் தெருவாசிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி இன்று (20ம் தேதி) தஞ்சை கீழவாசல் பகுதியில் 27,28,29,30,31,32,34 ஆகிய வார்டுகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

Tags : Tanjore ,AIADMK ,Vaithilingam ,
× RELATED தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு...