குலசேகரம், மார்ச் 20: பத்மநாபபுரம் தொகுதியில் ஆரம்ப காலத்தில் நாம் தமிழர் கட்சியை கட்டமைத்தவர்கள் மற்றும் ஆற்றூர் பகுதியில் செயல்பட்டு வந்த நாம் தமிழர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ஒன்றிணைந்து ஆற்றூர் சந்திப்பில் பத்மநாபபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மனோ தங்கராஜ் எம்எல்ஏவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அதோடு தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உழைப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். இதில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் ஜாண்சிலின் சேவியர்ராஜ், இன்பராஜ், நன்மாறன், அரவிந்த், லாறன்ஸ், நாம் தமிழர் ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் நடராஜன், செயலாளர் ராஜகுமார், பொருளாளர் ஐசக் உட்பட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் மனோ தங்கராஜ் எம்எல்ஏ உங்களுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும். நாம் ஒன்றுபட்டு தமிழகத்தில் மதவாதத்தை திணித்து ஊழலில் திழைப்பவர்களுடன் கூட்டணி அமைத்து உலா வருபர்களை துரத்தியடிப்போம் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் திருவட்டார் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜாண் பிரைட், பொருளாளர் சுந்தர்ராஜ், மண்டல பொறுப்பாளர்கள் லெனின், சிவன், ஆற்றூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பீனா அமிர்தராஜ், ஆற்றூர் பேரூர் செயலாளர் சோழராஜன், ஒன்றிய மீனவரணி அமைப்பாளர் பாபு, துணை அமைப்பாளர் ஆன்றனி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.