×

14 வயது சிறுமி கர்ப்பம் போக்சோவில் மீனவர் கைது

அறந்தாங்கி, மார்ச்20: புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினத்தைச் சேர்ந்தவர் பரக்கத்நிஷா( 36). இவரது முதல் கணவர் நைனாமுகமது. 20 வருடங்களுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து பகுருதீன் என்பவரை பரக்கத்நிஷா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பகுருதீனும் குழந்தைகளை விட்டு விட்டு பரக்கத்நிஷாவை பிரிந்து சென்று விட்டார். இதைத் தொடர்ந்து அம்ஜத்கான்( 44) என்பவரை பரக்கத்நிஷா 3வதாக திருமணம் செய்து கொண்டார்..பரக்கத்நிஷா அம்ஜத்கானுக்கு 2-வது தாரமாகும். கடலுக்கு மீன்பிடிக்கும் தொழில் செய்து வரும் அம்ஜத்கானுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. பரக்கத்நிஷா மீமிசல் பகுதியில் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அம்ஜத்கான், குடிபோதையில் பரக்கத்நிஷாவின் 2-வது கணவரின் மகளான 14 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி 8-மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் வயிற்றுவலியால் துடித்த அவரை அவரது தாயார் பரக்கத்நிஷா அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சையில் இருந்த சிறுமியிடம் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில்அம்ஜத்கான் குடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அம்ஜத்கான்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags : Pokmon ,
× RELATED வீட்டில் தங்கி இருந்த போது 14 வயது...