×

லோடு ஆட்டோ கவிழ்ந்து 17 பேர் காயம் அறந்தாங்கி ,நாகுடி பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது 10 கிலோ கஞ்சா பறிமுதல்

அறந்தாங்கி, மார்ச்20: அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு வந்த தகவலையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சிவசாமி மகன் முருகன் ( 62 )இவரது வீட்டில் 5 கிலோ கஞ்சாவை 100 கிராம் 50 கிராம் மற்றும் உதிரியாக விற்பனைக்காக வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்து முருகனை கைது செய்தனர்.

இதேபோன்று அறந்தாங்கி அருகே நாகுடி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த அறந்தாங்கி எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மற்றும் இக்பால் ஆகிய இருவரை போலீசார் விசாரித்த போது அவர்களது இரு சக்கர வாகனத்தில் 5 கிலோ கஞ்சா வைத்திருந்ததை கண்டறியப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டனர். 3 நபர்களிடம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் நீதி மன்ற சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Nagudi ,
× RELATED அறந்தாங்கி அருகே மக்களை அச்சுறுத்தும் உடைந்த மின்கம்பம்