விருதுநகர், மார்ச் 20: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் மாவட்ட விளையாட்டு துறை மூலம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ,மாணவியர், பொதுமக்கள் பங்கேற்ற மினி மாரத்தான் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த மினி மாராத்தானில் கலெக்டர் கண்ணன் வாக்களிப்பதன் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டிசர்ட்டு, தொப்பி அணிந்து ஓடினார். கல்லூரியில் துவங்கி அரசு மருத்துவமனை, மாரியம்மன்கோவில், தெப்பக்குளம், கருமாதி மடம், புது பஸ்நிலையம் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கை வந்தடைந்தனர். அதன்பின் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.