×

தனியார் பள்ளியில் வாட்ச்மேன் தூக்கிட்டு தற்கொலை

ஆண்டிபட்டி, மார்ச் 20: ஆண்டிபட்டியில் ஏத்தக்கோயிலுக்கு செல்லும் சாலையில் தனியார் பள்ளியில் வாட்ச்மேன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆண்டிபட்டி மேலத்தெருவைச் சேர்ந்தவர் ராமராஜ் (65). இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர், ஏத்தக்கோயில் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார். இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இதனால், அவரது மனைவி அவரை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு அவர் வேலைபார்க்கும் பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். தகவலின்பேரில் வந்த ஆண்டிபட்டி போலீசார், ராமராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Watchman ,
× RELATED உழைத்தபடி படித்து சாதித்தார் இரவு...