×

பெரம்பலூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

பெரம்பலூர், மார்ச் 20: பெரம்பலூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் களரம்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் கனகராஜ் (29). விவசாயியான இவர், அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் தொடர்பாக, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகா ரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட கனகராஜை கைது செய்து, போக் சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...