×

உங்களுக்கு உழைக்கின்ற ஊழியனாக உங்களில் ஒருவனாக இருக்கின்றேன் திருப்புத்தூர் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு

திருப்புத்தூர், மார்ச் 20:  திருப்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ, பிள்ளையார்பட்டியில் நேற்று தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார். திமுக ஒன்றிய செயலாளர்கள் சண்முகவடிவேல், குன்றக்குடி சுப்பிரமணியன், விராமதி, மாணிக்கம், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பிரசாரத்தில் பெரியகருப்பன் எம்எல்ஏ பேசுகையில், ‘‘தற்போது இந்த தொகுதியில் தேர்தல் நடைபெறுகின்ற காரணத்தாலேயே பலர் திருவிழாக்களுக்கு வருவதைப்போல வரலாம், போகலாம். ஆனால் என்னை பொறுத்தவரையில், நான் என்றைக்கும் உங்களில் ஒருவனாக இருக்கிறேன்.

உங்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை பெற்றவன். நீங்களும் என்னை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை பெற்றவர்கள் என்பது உங்களது நன்றாக புரியும். ஆகவே உங்களுக்கு உழைக்கின்ற ஒரு ஊழியனாக தொண்டு செய்கின்றபோது, ஒருமுறை அல்ல, தொடர்ந்து மூன்று முறையல்ல, இப்பொழுது நான்காவது முறையும் போட்டியிடும் என்னை, நீங்கள் வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்  என்றார். இதை தொடர்ந்து உடையார்குடியிருப்பு, என்.வைரவன்பட்டி, சமத்துவபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

Tags : Tiruputhur ,DMK ,KR Periyakaruppan ,
× RELATED 100% சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி...