×

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

சீர்காழி, மார்ச் 20: வைத்தீஸ்வரன் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் 18 சித்தர்களில் முதன்மையான தன்வந்திரி சித்தர், இந்த கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு தினம்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் கிருத்திகை வழிபாடு நடந்தது. இந்நிலையில் கோயிலில் நேற்று கிருத்திகையையொட்டி செல்வ முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானையுடன் கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி முன்னிலையில் அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Vaitheeswaran Temple ,Sirkazhi ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்