மயிலாடுதுறை, மார்ச் 20: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மூலிகை தோட்டம் திறப்பு விழா மற்றும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தருமபுரம் ஆதீனம், கலெக்டர் லலிதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மூலிகை தோட்டத்தை திறந்து வைத்து மூலிகை செடிகளை நட்டு வைத்தனர்.
இதைதொடர்ந்து மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கொரோனா காலத்தில் அர்ப்பணிப்பு டன் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தலைமை மருத்துவர் ராஜசேகர் உள்ளி ட்ட பலர் கலந்து கொண்டனர்.