×

6 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 தேர்தல் பொது பார்வையாளர்கள் நியமனம்

நாகை, மார்ச் 20: நாகை மற்றும் மயிலாடுதுறையில் மாவட்டங்களில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 தேர்தல் பொது பார்வையாளர்கள் வந்துள்ளனர். சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ராஜ்குமார் யாதவ் (செல்போன் எண் 8300746724), பூம்பூகார், நாகை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏ,பி.பட்டேல் (செல்போன் எண்- 8438671059), கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு திலீப்பந்தர்பட் (செல்போன் எண் 6369950082) மற்றும் காவல் பார்வையாளராக லுபெங்கைலன் (செல்போன் எண் 7010087782) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அவர்களுக்குரிய தொகுதிகளில் தேர்தல் எவ்வாறு நடக்கிறது என்ற விவரத்தை கண்காணித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தங்கள் தொகுதியின் தேர்தல் தொடர்பான புகார்கள் அல்லது கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் மேற்கண்ட செல்போன் எண்கள் மூலமாகவும், வாட்ஸ் அப் செய்தி வழியாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்