மயிலாடுதுறை, மார்ச் 20: சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வாக்காளர்களுக்கு உணர்த்தும் விதமாக மயிலாடுதுறையில் கல்லூரி மாணவர்கள் சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் துவங்கிய பேரணியை மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதில் மயிலாடுதுறையை சேர்ந்த 7 கல்லூரிகளில் பயிலும் 100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அப்போது தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். விழிப்புணர்வு பேரணி, மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன் நிறைவடைந்தது.