×

நான்கு தொகுதிகளில் 132 பேர் மனுத்தாக்கல்

ராமநாதபுரம், மார்ச் 20:  தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்.6ல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மார்ச் 12ல் தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடைசி நாளான நேற்று வரை 132 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். பரமக்குடி (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் செ.முருகேசன், அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் உள்பட 24 பேர் மனுத்தாக்கல்
செய்துள்ளனர். திருவாடானை தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கரு.மாணிக்கம், அதிமுக வேட்பாளர் கே.சி.ஆனிமுத்து உள்பட 32 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், அதிமுக கூட்டணி பாஜ வேட்பாளர் குப்புராமு உள்பட 38 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன், அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி உள்பட 38 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான நேற்று மட்டும் பரமக்குடி தொகுதியில் 8 பேர், திருவாடானை தொகுதியில் 9 பேர், ராமநாதபுரம் தொகுதியில் 21 பேர் உள்பட 58 பேர் மனுத்தாக்கல் செய்தனர். மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது