×

ஊருக்குள் நுழையவிடாமல் தடுத்து அதிமுக வேட்பாளர் விரட்டியடிப்பு: மேலூர் அருகே பரபரப்பு

மேலூர், மார்ச் 20:  மதுரை மேலூரில் அதிமுக வேட்பாளரும், தற்போதைய மேலூர் தொகுதி எம்எல்ஏவுமான பெரிய புள்ளான் (எ) செல்வம் நேற்று மாலை அழகர்கோவில் கோட்டை வாசலில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.  ஏ.வலையபட்டியில் வாக்குசேகரித்த அவர், அருகே உள்ள அய்யம்பட்டியில் வாக்குச் சேகரிக்க சென்றார். ஆனால், அவர் வாகனத்ைத ஊருக்குள் நுழையவிடாமல் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ` 5 வருடங்களாக எங்கள் ஊருக்கு என்ன செய்தாய்? இப்ப எங்க வந்தாய் ?’ என்று மக்கள் கேள்வி எழுப்பினர். அங்கிருந்த போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதனால் அதிமுக வேட்பாளர் பெரிய புள்ளான் அங்கு பிரசாரம் செய்யாமலேயே திரும்பி சென்றார். அதிமுக வேட்பாளரை அவரது சமுதாயனத்தினரே விரட்டியடித்த சம்பவம் மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : AIADMK ,Melur ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...