×

குளித்தலை பகுதியில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு கரும்பு அறுவடை பரிசோதனை பயிற்சி


குளித்தலை, மார்ச் 20:குளித்தலை அடுத்த க.பேட்டை கிராமம் ஐநூற்றி மங்கலத்தில் குளித்தலை வட்டார வேளாண்மை துறை சார்பில், கரும்பு அறுவடை பரிசோதனை நடந்தது.புள்ளியியல் உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி, வட்டார புள்ளியியல் ஆய்வாளர் பத்மநாபன், துணை வேளாண்மை அலுவலர் கணேசன், உதவி வேளாண்மை அலுவலர் தனபால், மற்றும் விவசாயி கமலக்கண்ணன்முன்னிலையில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனையின் நுணுக்கங்களையும் முக்கியத்துவம் குறித்து உதவி வேளாண் அலுவலர் கணேசன் கூறுகையில், தேர்வு செய்யப்பட்ட இந்த கரும்பு பயிரானது 2020 ஜனவரி மாதம் நடவு செய்யப்பட்டு, வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, மற்றும் புள்ளியியல் துறை இணைந்து செயல்படுத்தும் பொது பயிர் மதிப்பீட்டு ஆய்வு திட்டத்தின்கீழ் கரும்பு பயிர் அறுவடை பரிசோதனை செய்ய 2020 நவம்பர் மாதம் இந்த வயல் பரிசோதனைக்காக தேர்வு செய்யப்பட்டது.

இந்த கரும்பு அறுவடை செய்யப் பட்டு கரும்பு ஆலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.இந்த வயலின் அறுவடை மகசூல் கணிப்பு அந்த கிராமத்தில் மகசூலும் குளித்தலை வட்டாரத்திலுள்ள கிராமங்களில் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு ,குளித்தலை வட்டாரத்தில் ஒட்டுமொத்த விளைச்சலையும், இவ்வாறாக மாவட்டம், மாநிலம், மற்றும் தேசிய அளவில் ஒட்டு மொத்த மகசூல் மற்றும் உற்பத்தி கணக்கிடப்பட்டு வருகிறது. நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி கணக்கிடுவது இம்மாதிரி பயிர் அறுவடை பரிசோதனை மூலமாகவே நடைபெறுகிறது என்பதை விளக்கி, பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள் 11 பேர் மற்றும் கிராம விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kulithalai ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...