×

குளித்தலை அருகே தாளியாம்பட்டியில் குடிநீர்தொட்டியை சுற்றி கழிவுநீர் தேங்கிய அவலம்

குளித்தலை, மார்ச் 20: கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் வைகநல்லூர் ஊராட்சி தாளியாம்பட்டி லிருந்து வேங்காம்பட்டி செல்லும் சாலையில் மினி டேங்க் பொதுமக்கள் வசதிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த மினி டேங்கில் அப்பகுதி குடியிருப்பு பொதுமக்கள் தினமும் காலை முதல் மாலை வரை பயன்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் இந்த குடிநீர் தொட்டி பொதுமக்கள் பயன்படுத்திய பிறகு கழிவு நீர்களை வெளியேற்ற வசதியில்லாமல் தொட்டியை சுற்றி விடுவதால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி நோய்பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நோய் பரவாமல் இருக்க தாளியாம்பட்டியிலிருந்து வேங்காம்பட்டி செல்லும் சாலையில் உள்ள மினி டேங்க் தொட்டியை சுத்தப்படுத்தி நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thaliampatti ,Kulithalai ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...