×

கொடைக்கானலில் ெபாதுக்கூட்டம், பிரசாரம் நடத்தும் இடங்கள் அறிவிப்பு

கொடைக்கானல், மார்ச் 20: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. அதேபோல் அரசியல் கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம், தெருமுனை பிரசாரம் நடத்தும் இடங்களை, போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஒதுக்கீடு செய்துள்ளனர். இதுபற்றிய அறிவிப்பை கொடைக்கானல் காவல்நிலையத்தில் டிஎஸ்பி ஆத்மநாதன் வெளியிட்டுள்ளார்.

அதன்விபரம் வருமாறு:பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள்: மூஞ்சிக்கல், கலையரங்கள், பூம்பாறை, பூண்டி, வில்பட்டி.தெருமுனை பிரசாரம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள்: கொடைக்கானல் பஸ்நிலையம் அருகே, அப்சர்வேட்டரி அருகே, டிப்போ காளியம்மன் கோயில் அருகே, 7 ரோடு ஜங்சன், அண்ணாநகர் சின்னமாரியமமன்

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...