×

ஆவடி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர பாடுபடுவேன்: திமுக வேட்பாளர் ஆவடி நாசர் வாக்குறுதி

ஆவடி, மார்ச் 20: ஆவடி தொகுதியில் மாணவர்களின் நலன் கருதி அரசு கலைக்கல்லூரி கொண்டு வர பாடுபடுவேன் என தேர்தல் பிரசாரத்தில் திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசர் வாக்குறுதி அளித்தார். ஆவடி தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திமுக வேட்பாளராக போட்டியிடும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இவர், ஆவடி நகர கிழக்கு பகுதியான திருமுல்லைவாயல், அண்ணனூர் பகுதிகளில் உள்ள 10,11,13,14 ஆகிய வார்டுகளில்  திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அதன் பிறகு, அவர் ஆவடி, சி.டி.எச் சாலையில் உள்ள பிரபல இரும்பு டியூப் தயாரிக்கும் தொழிற்சாலை வாயில் முன்பு தொழிலாளர்களிடம் வாக்கு கேட்டார். அப்போது, அவருக்கு பொதுமக்கள், தொழிலாளர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். மேலும், தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர்.

அப்போது வேட்பாளர் ஆவடி நாசர் பொதுமக்கள், தொழிலாளர்களிடம் பேசியதாவது: “குண்டும், குழியுமாக சேதமடைந்து கிடக்கும் அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் 60 அடி சாலை, திருக்குறள் பிரதான சாலை, சிவசக்தி நகர், ஏ செக்டர் 40 அடி சாலை ஆகியவற்றை  சீரமைக்க அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும், அண்ணனூர், திருமுல்லைவாயல் பகுதிகளில் எரியாமல் கிடக்கும் மின் விளக்குகளை எரிய செய்யவும், புதிய மின் விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்வேன். அண்ணனூர் 60 அடி சாலையில் இருந்து மசூதி வரை உள்ள பழைய மழைநீர் கால்வாயை, ஆழம், அகலப்படுத்தியும் புதிய கால்வாய் ஏற்படுத்தி மழைநீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்வேன். சிவசக்தி நகர் ஏ செக்டரில் புதிதாக பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். இந்த பகுதியில் உள்ள தெருக்களில் நாள்தோறும் குப்பைகளை அகற்றி சுகாதாரம் பேணப்படும்.

ஆவடி தொகுதியில் மாணவர்களின் நலன் கருதி, அரசு கலைக்கல்லூரி கொண்டுவர பாடுபடுவேன். எனவே, நீங்கள் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்”
இவ்வாறு அவர் பேசினார். தேர்தல் பிரசாரத்தில், திமுக மாநில மாணவரணி இணைச்செயலாளர் பூவை.ஜெரால்டு, மாவட்ட துணைச்செயலாளர் ஜெ.ரமேஷ், மதிமுக தேர்தல் பணிச்செயலாளர் வக்கீல் ஆவடி அந்திரிதாஸ், ஆவடி மாநகர காங்கிரஸ் தலைவர்கள் இ.யுவராஜ், ஏ.ராஜசேகர், ஆவடி மாநகர திமுக பொறுப்பாளர்கள் பேபி வி.சேகர், ஜி.ராஜேந்திரன், ஜி.நாராயணபிரசாத்,

பொன் விஜயன், மதிமுக ஆவடி மாநகர செயலாளர் எஸ்.சூரியகுமார், விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர் ஆவடி மு.ஆதவன், நகர செயலாளர் முல்லை நேதாஜி, சி.பி.எம், சி.பி.ஐ நிர்வாகிகள் பூபாலன், ராஜன், மயில்வாகனன், மதிவாணன், ராமானுஜம், ஆவடி கிழக்கு நகர பொறுப்பு குழு உறுப்பினர்கள் சண்.பிரகாஷ், மு.பாலகிருஷ்ணன், கா.குப்புராஜ், ஆர்.சுதாகர், எம்.சரவணன், எம்.நாகஜோதி, வட்டச்செயலாளர்கள் முல்லை ராஜி, உதயகுமார், செல்வம், நாகராஜ், கோபால், குணசேகர், பெருமாள், இளங்கோ, அரி, வெங்கடேசன், சுரேஷ், சிறுபதி உட்பட வட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சி  பிரமுகர்கள் ஏராளமானோர்  கலந்துகொண்டனர்.

Tags : Avadi ,DMK ,Avadi Nasser ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!