×

குஜிலியம்பாறை அருகே டூவீலர் கவிழ்ந்து வாலிபர் பலி

குஜிலியம்பாறை, மார்ச் 20: கரூர் மாவட்டம், வீரியபட்டியை சேர்ந்தவர் கதிரவன் (19). அதே ஊரை சேர்ந்த இவரது நண்பர் விஜயகுமார். இருவரும் கரூரில் தனியார் பஸ் பாடி கட்டும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீரியபட்டியில் இருந்து குஜிலியம்பாறை வழியே கொடைக்கானலுக்கு டூவீலரில் சென்றனர். டூவீலரை கதிரவன் ஓட்டி வந்தார். குஜிலியம்பாறை பெட்ரோல் பங்க் சாலையில் விரிவாக்க பணிக்காக மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் நேராக டூவீலரை ஓட்டி சென்றனர். இதனால் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கதிரவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
பின்னால் அமர்ந்திருந்த விஜயகுமாருக்கு கால்முறிவு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த குஜிலியம்பாறை போலீசார் விஜயகுமாரை மீட்டு கரூர் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எஸ்ஐ மலைச்சாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Kujiliampara ,
× RELATED குஜிலியம்பாறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்