×

கத்தியை காட்டி பணம் பறிப்பு 2 ரவுடிகள் உள்பட 3 பேர் கைது

திருச்சி, மார்ச் 19: திருச்சியில் கத்தியை காட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கே.கே.நகர் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் சிவநாதம் (42). இவர் நேற்று முன்தினம் கே.கே.நகர் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கே.சாத்தனூர் கல்லாத்து வீடு பகுதியை சேர்ந்த கோபிநாத் (19) கத்தியை காட்டி சிவநாதனிடமிருந்து ரூ.1000ஐ பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதேபோல், திருச்சி இபி ரோடு விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் குமார் (51). இவர் நேற்று முன்தினம் தேவதானம் ஜங்ஷன் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இபி ரோடு அண்ணாமலை நகரை சேர்ந்த ஆறுமுகம் (21), கீழதேவதானத்தை சேர்ந்த தினேஷ்(எ) பலசாலி தினேஷ்(30) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி குமாரிடமிருந்து ரூ.500ஐ பறித்து சென்றனர். இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளனர்.இதுகுறித்து குமார் அளித்த புகாரின் பேரில், கோட்டை போலீசார் ஆறுமுகம், தினேஷ் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு