×

துறையூர் நகரை சுற்றி புறவழிச்சாலை அமைக்கப்படும்

துறையூர், மார்ச் 19: துறையூரில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திமுக முதன்மை செயலாளர் கே.என.நேரு தலைமை வகித்தார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட அமைப்பாளர் வைரமணி, மாவட்ட பொருளாளர், தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர்கள் துறையூர் அண்ணாதுரை, உப்பிலியபுரம் முத்து செல்வன், ஊராட்சி குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கே.என்.நேரு வேட்பாளர் ஸ்டாலின் குமாரை அறிமுகப்படுத்தி பேசியதாவது: பேருந்து நிலையம் அருகில் உள்ள சின்ன ஏரி தூர்வாரப்பட்டு அங்கு புதிதாக கடைகள் கட்டப்பட்டு நகராட்சிக்கு வருமானத்தை ஏற்படுத்தி தரப்படும். நகரத்தை சுற்றி புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய தொழிற் சாலைகள் அமைக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும். எனவே திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமாரை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார். முன்னதாக துறையூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுந்தரவடிவேலுவிடம் வேட்பாளர் ஸ்டாலின் குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக பூபதி செல்லதுரை மனு தாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிட குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், ஒன்றிய பொருளாளர் சுபரமணியன், மாவட்ட பிரதிநிதி மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thuraiyur ,
× RELATED துறையூர் அருகே கார், ஆட்டோ மோதல் முதியவர் பரிதாப பலி