×

முசிறி அருகே தண்டலைபுத்தூர் கிளை நூலகத்தில் தீ விபத்து புத்தகங்கள் எரிந்து சேதம்

முசிறி, மார்ச் 19: முசிறி அருகே தண்டலைபுத்தூர் கிராமத்தில் கிளை நூலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் எரிந்து சேதமானது. முசிறி அருகே உள்ள தண்டலைப்புத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தில் உள்ளூர்வாசிகள் புத்தகங்கள், தினசரி நாளிதழ்கள் ஆகியவற்றை படித்து பயன்பெற்று வருகின்றனர். நேற்று கிளை நூலகர் தனலட்சுமி நூலகத்தை பூட்டிவிட்டு உணவு இடைவேளைக்காக வீட்டிற்கு சென்றார். மீண்டும் வந்து நூலகத்தை திறந்தபோது உள்ளே புகை மூட்டமாக இருந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் முசிறி தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இதில் சுமார் 1000 புத்தகங்கள் எரிந்து போனது. இதன் மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய் ஆகும். தீ விபத்து குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Tandalaiputhur ,library ,Musiri ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நூலகம் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்தது