×

ஊரக திறனாய்வுத் தேர்வு நெடும்பலம் அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் தேர்ச்சி

திருத்துறைப்பூண்டி, மார்ச்19: நெடும்பலம் அரசு பள்ளியில் ஊரக திறனாய்வுத் தேர்வில் 8 பேர் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர். டிரஸ்ட் எனப்படும் ஊரகத் திறனாய்வு தேர்வில் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 8 பேர் தேர்வு பெற்றனர். மாவட்டத்தில் அதிக அளவில் இப்பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். சாரத பிரியா, பரத்ராம், தயாநிதி, டேனியல் ராஜ், ஹரிஹரன், காளிதாஸ், கீர்த்தி வாசன், வீரபாண்டி ஆகியோர் அடங்குவர். தேர்wச்சி பெற்ற இம்மாணவர்களையும், ஊக்குவித்த ஆசிரியர்களையும் தலைமையாசிரியர் தங்கராசு, உதவி தலைமையாசிரியர்கள் தனபாலன், கலைச்செல்வன், அன்புகுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : Government School ,
× RELATED ஒடுகத்தூர் அருகே பரபரப்பு அரசு...